Friday, January 29, 2016

பாலியல் கொடுமை செய்யக் கூடியவர்கள் யார்? - அனைத்து பெற்றோரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவை


உலகளாவிய ரீதியில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், குழந்தை கர்ப்பம்.... என வேகமாக நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

இதிலிருந்து எவ்வாறு உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது என்பது அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஆழமாக தெரிந்திருக்க வேண்டிய ஒரு அத்தியாவசியம்.

பாலியல் கொடுமை செய்யக் கூடியவர்கள் யார்?
பாலியல் குற்றவாளிகள் என்பவர்கள் குடிகாரர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், உளவியல் சிக்கலுக்குள்ளானவர்கள் என்றெல்லாம் சில தவறான கருத்து இருக்கிறது.

உண்மையில் அவர்கள் உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். வெளிநபராகவும் இருக்கலாம், யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள்தான் என்று வகைப்படுத்த முடியாது.

படித்தவர்கள், பெரிய பதவியில இருப்பவர்கள், கெளரவமான குடும்பத்தில் இருப்பவர்கள், சின்ன பசங்க, பெரிய பசங்க, வயதானவங்க போன்ற அடையாளங்களால் நாம் நம்பிக்கை கொள்வது தவறாக முடிந்துவிடக்கூடும்.

பாலியல் கொடுமைக்குள்ளான குழந்தைகள் பற்றிய ஒரு ஆய்வில், 60% சதவிகித குற்றவாளிகள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவரே என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

குழந்தைகளை நெருங்கும் ஆபத்துகள் என்ன...

தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை குழந்தையிடம் காட்டுவது அல்லது குழந்தைகளின் உறுப்புகளை காட்ட சொல்வது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் தொடச் செய்வது, குழந்தைகள் ஆடையில்லாமல் இருக்கும்போது மறைந்திருந்து பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது, ஆபாச படங்களை காண்பிப்பது மற்றும் அது பற்றிய விளக்கங்களை தருவது,

சீக்ரெட் கேம் (ரகசிய கேம்) விளையாடலாம் என அழைப்பது, பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அதீத அன்புடன் இருப்பது போல நடிப்பது, குழந்தையின் பெற்றோரிடம், 'நீங்கள் செல்லுங்கள்..

நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன்' என அதீத உரிமையை எடுத்துக் கொள்வது, மற்ற குழந்தைகள் போல விளையாட விடாமல் தனிமைபடுத்துவது, இருவருக்குமான விஷயங்களை நெருக்கமானவரிடம் சொல்ல அனுமதிக்காமல் சூழ்ச்சி செய்வது, குழந்தைகளை குற்றவாளிகள் என பட்டம் கட்டி பெற்றோரிடம்,

'நான் உங்கள் குழந்தையை திருத்துகிறேன்...' என்று நடிப்பது, அறைக்குள் அத்துமீறி நுழைவது போன்ற செயல்கள் ஒரு மனிதரிடம் தென்பட்டால், அவர் குற்றவாளி என அடையாளம் காணுங்கள்.

குழந்தையின் நடத்தையில் மாற்றம்

குழந்தைகள் தன் இயல்பு நிலையிலிருந்து மாறி, விரல் சூப்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல், தனிமையில் இருத்தல், பாலியலில் விருப்பம் காண்பித்தல், படிக்க மற்றும் விளையாட முடியாமல் தவித்தல், புதிய நபர்களுடன் சேர்தல், கவனமின்மை, வன்ம குணத்துடன் காணப்படுதல் என குழந்தைகளின் போக்கில் மாற்றமிருந்தால் அவர்களை கண்காணித்து, அக்கறையுடன் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கேளுங்கள்.

சொல்ல தயங்கினாலும் அவர்களிடம் நம்பகத் தன்மையுடன் பேசி, உண்மையை கேட்டறியுங்கள். சில சமயங்களில் குழந்தைகள் எதையும் வெளிப்படையாக சொல்ல தயங்கலாம்.

குழந்தைகள் தயங்குவதற்கான காரணங்கள்

நமக்கு நடந்த அனுபவத்தை பற்றி சொன்னால் பெற்றோர் தன்னை நம்ப மாட்டார்கள், அடிப்பார்கள், திட்டுவார்கள் என்ற பய உணர்வு.

பெற்றோரின் அன்பை இழந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வு, தங்களை வெறுத்து ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம்.

கொடுமை இழைத்தவர் மிகவும் தெரிந்தவராக இருப்பின், அவரின் அன்பை இழந்து விடுவோமோ என்ற குழப்பம்.

அவமானம், குற்ற உணர்ச்சி, தான் தவறு செய்து விட்டோம் என்ற மனோபாவம், நம் மீதுதான் தவறு என்று குற்றம் சாட்டப்படுவோம் என்ற எண்ணம்.

குற்றம் புரிபவர் மிரட்டுவதால் தனக்கோ, தன் பெற்றோருக்கோ ஆபத்து நேரிடும் என்ற பயத்தால், அவர்கள் தங்களுக்கு நடந்ததை சொல்ல தயங்குகின்றனர்.

கொடுமைக்கு தாங்களே பொறுப்பு என கொடுமைகளோடு போராட பழகிக் கொள்கின்றனர்.

பாலியல் கொடுமைகளை தவிர்க்கும் வழிகள் என்ன

குழந்தைகளிடம் நேரத்தை செலவழியுங்கள். உங்களின் பாதுகாப்பு வட்டத்துக்குள்ளேயே குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள். எவரையும் நம்பி குழந்தைகளை ஒப்படைக்காதீர்கள். குழந்தையிடம் பாலியல் கல்வி பற்றி கற்றுக் கொடுங்கள். டிவி, பேப்பரில் நடந்ததை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

தெரிந்தவரோ, அறிமுகமில்லாத நபரோ, யாராகினும் உள்ளாடைகளின் மூலம் மறைக்கப்படும் உடல் உறுப்புகளை தொட்டாலோ, தொட முயற்சித்தாலோ அவரை விட்டு ஓடி வந்துவிடவேண்டும் என கற்றுக்கொடுங்கள்.

பாதுகாப்பான தொடுகை

தொடுதல் விதியை கற்றுக்கொடுங்கள். safe touch அதாவது, உன்னை சுத்தமாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெற்றோர் மற்றும் மருத்துவர் தொடலாம்.

unsafe touch, இதை தவிர வேறு காரணங்களுக்கு தொடுவது சரியல்ல என்று புரிய வையுங்கள்.

அசௌகரியமாக உணர்ந்தால் அங்கிருந்து உடனே வெளியேறுவது நல்லது என்றும், உடனே பெரியவர்களிடம் இதை பற்றி அவசியம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லுங்கள். வேண்டாம், முடியாது என்று கத்திக் கொண்டு அங்கிருந்தோ, அந்த நபரிடம் இருந்தோ வெளியேற வேண்டும் என சொல்லித் தாருங்கள்.

பொதுவாக பாலியல் கொடுமைகள் மறைவான இடத்தில் நடப்பதால், அங்கிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஓடி வந்துவிட வேண்டும் என சொல்லி தரலாம்.


குழந்தை- பெற்றோர் உறவு

குழந்தைகளை நம்புங்கள்:

உங்கள் குழந்தையை நீங்கள்தான் நம்ப வேண்டும். அவர்கள் எவ்வளவு பெரிதாக சித்தரித்து சொன்னாலும் அவர்களின் பேச்சை கவனமாக கேளுங்கள். குழந்தை பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளது என்று தெரிந்தால், ''இது உன் தவறல்ல" என்று சொல்லி நீ சொல்வதை நம்புகிறேன் என தீர விசாரியுங்கள்.

பொறுமையை கடைபிடியுங்கள்:

அவர்களின் அனுபவத்தை சொல்லும் போது அழுது, கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். அமைதியாய் கேளுங்கள். இது உனக்கு மட்டும் நடந்தது அல்ல, மற்ற குழந்தைகளுக்கும் இப்படி நடந்து இருக்க கூடும் என புரிய வையுங்கள்.

பின்னர், குற்றவாளியை கண்டறிந்து குழந்தையை பாதுகாப்பதில் முழு மூச்சாய் இறங்குங்கள். குழந்தையின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள்.

பாதுகாப்பு கொடுங்கள்:

குழந்தையிடம் அதிக கவனத்தை செலுத்துங்கள். குழந்தைக்கு எப்போதும் ஆதரவாய் இருங்கள். பெற்றோரின் ஆதரவே குழந்தைகளின் எதிர்காலம். பாதுகாப்பாக உணர்வதற்கான செயல்களை செய்யுங்கள். நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு கவசமாய் மாறுங்கள்.

பாதிக்கப்பட்டோரை பழிக்காதீர்கள்:

ஏற்கனவே உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட குழந்தையை மேலும் மேலும் காயப்படுத்த வேண்டாம்.

நீ ஏன் அங்கு போனாய், உன்னை யார் அவரிடம் விளையாட சொன்னது போன்ற வார்த்தைகள் குழந்தையை பலவீனமாக்கும். தன் நிலையை புரிந்து கொள்ள எவருமில்லை என தனிமையை தேடும். தற்கொலை எண்ணம் தலைதூக்கும். வேறு விபரீதங்கள் கூட நடக்கலாம்.

குழந்தை வளர்ப்பில் கவனம்:

பெண் குழந்தைகளுக்கு மட்டுமே அறிவுரைகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என அமுல்படுத்த வேண்டாம். ஆண் குழந்தையின் மேலும் கவனத்தை திருப்புங்கள். ஆண் பெண் சம உரிமை, இருவருமே உலகில் வாழ தகுதியானவர், இருவருக்குமே சம உரிமையுண்டு, இருவரின் ஆற்றலும் திறமையும் சமம்தான்; உருவங்கள் மட்டுமே வேறுபாடு, மனம்-உணர்வு-வலி-விருப்பம் ஆகியவை இருவருக்குமான பண்புகள் என சமத்துவம் காண்பியுங்கள்.

ஆண்-பெண் குழந்தைகள் உறவு:

இருவரையும் ஒன்றாகவே விளையாட விடலாம், தவறில்லை. குறிப்பிட்ட வயதில் வரும் மாற்றங்கள் இயற்கையானவை, இயல்பானவை என்று சொல்லுங்கள். சிறுநீர், வியர்வை மற்றும் மலம் எப்படி கழிவோ அதுபோல பாலுணர்வும் (sex) ஒரு மனிதக் கழிவுதான். இதை வெளியேற்றுவதற்கான வயது 18, பாலுணர்வு இருவரின் விருப்பத்தோடு நடைபெற வேண்டும்.

அது சூழ்நிலையாலோ, தனிநபரின் விருப்பத்தாலோ, கட்டாயப்படுத்தியோ, வன்முறை உணர்வோடோ இருக்க கூடாது என தெளிவாக புரிய வையுங்கள்.

சினிமா-நாடகம்-கதைகள் போன்றவற்றில் வரும் தவறான கருத்துகள் (myth):

ஒருவரை பலாத்காரம் செய்தால் அவர் தற்கொலை செய்து கொள்வது, ஒருவருடன் உடலுறவு மேற்கொண்டால் அவரைதான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை, இனி நமக்கு திருமணம் நடக்காது, பெற்றோர் சமூகம் ஒதுக்கி வைத்துவிடும் என்ற தவறான புரிதல் இவற்றையெல்லாம் களையுங்கள். உண்மையை எடுத்துச் சொல்லுங்கள். யதார்த்தத்தை விளக்குங்கள்.

பாகுபாடு

குழந்தைகளுக்கு நோ சொல்ல கற்றுக் கொடுங்கள்:

பெரியவராக இருந்தாலும் சரி, அப்பா, அம்மா, தாத்தா யார் வேண்டுமானாலும் தவறு செய்தால் தவறை எதிர்த்து கண்டிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.

உணவில், விளையாட்டிலும் பாகுபாடு வேண்டாம். ஆண் குழந்தைக்கு அதிக உணவு, பெண் குழந்தைக்கு குறைந்த உணவு. ஆண் குழந்தை சாப்பிட்ட பின் பெண் குழந்தை சாப்பிட வேண்டும். ஆண் பிள்ளைக்கு கார், பேட், பால். ஆனால் பெண் குழந்தைக்கு பொம்மை, சொப்பு சாமான்.

பெண் பிள்ளையெனில் பாட்டு க்ளாஸ், ஆண் பிள்ளையெனில் டென்னிஸ் க்ளாஸ் என்ற பாகுபாடுகளை தூக்கி எறியுங்கள். சம உரிமை கொடுத்து குழந்தையின் விருப்பத்திற்கேற்ப படிக்க விடுங்கள், விளையாட விடுங்கள்.

உடலுக்கு நீங்களே பொஸ்:

குழந்தைகளிடம், உங்களின் உடலுக்கு நீங்கள்தான் பொஸ். நீங்களே முதலாளி. உங்கள் உடல் உங்களுக்கு மட்டும்தான் பணிய வேண்டும். மற்றவரின் விருப்பத்திற்கு உங்களின் உடல் பணியக் கூடாது.

தேவையில்லாமல் உங்கள் உடலை தொட யாருக்கும் உரிமையில்லை என்ற புரிதலை குழந்தைகள் மனதில் அழுத்தமாக ஏற்படுத்துங்கள்.

உங்கள் குழந்தை இனி பத்திரமாக இருப்பாள்/ன், நீங்கள் ஒரு பொறுப்பான பெற்றோராக இருந்தால்....!

Sunday, January 24, 2016

மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை

''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை''- கண்களில் நீர் கசிய வைக்கும் ஹோட்டல்
துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார், விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன், அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார். சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார். அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன. அதனை பார்த்த அகிலேஷ்குமார், அந்த சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார்.
அந்த சிறுவன் உள்ளே வந்தான். அவனுடைய குட்டித் தங்கையும் கூட இருந்தாள். சிறுவனிடம் என்ன வேண்டுமென்று அகிலேஷ் கேட்க, அவரது தட்டையே காட்டி கேட்டான் அந்த சிறுவன். உடனே அது போல மேலும் இரு பிளேட்டை அகிலேஷ் ஆர்டர் செய்தார். உணவை பார்த்ததும் அந்த சிறுவன் அவசரம் அவசரமாக சாப்பாட்டில் கை வைக்கத் தொடங்கினான்.
அப்போது அந்த சிறுவனின் கையை மற்றொரு பிஞ்சு கை தடுத்ததது. தடுத்தது அவனது தங்கை. தனது தங்கை ஏன் தன்னைத் தடுக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் அந்த சிறுவன். பின்னர் இருவரும் வாஷ்பேசினுக்கு சென்று கை கழுவி விட்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து மிகவும் அமைதியாக அமர்ந்து உணவை ருசித்து சாப்பிட்டுள்ளனர். அப்போது இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. ஏன் இருவரும் சிரித்துக் கொள்ளக் கூட வில்லை. சாப்பிட்டு முடிந்ததும், அந்த சிறுவன் அகிலேஷை பார்த்து கனிவுடன் சிரித்துள்ளான்.
பின்னர் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அண்ணனும் தங்கையும் அமைதியாக ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர்.அதுவரை அகிலேஷ் அந்த சிறார்கள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டு, தனது உணவில் கையை வைக்கவில்லை.
பின்னர் அவரும் சாப்பிட்டு முடித்த முடித்து விட்டு, பில் கேட்டுள்ளார். பில்லும் வந்துள்ளது. அதனை பார்த்ததும் அகிலேஷின் கண்கள் குளமாகின. பில்லில் தொகை எதுவும் எழுதப்படவில்லை. அதில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் இதுதான்... ''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை. உங்களுக்கு நல்லது நடக்கட்டும்!'

Wednesday, January 13, 2016

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தாலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு...
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.
தமிழர் பெருமையை பரப்ப இதை share செய்யுங்கள்..

Sunday, January 3, 2016

5 marriage lessons that Mothers Should Give to their Sons

புதிதாக கல்யாணம் கட்டிக்கொண்ட தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டிய அறிவுரை.!

(5 Marriage Lessons that Mothers Should Give to their Sons)

1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!

மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!

மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா.

3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!

மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா.!

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க
உதவி செய்யணும்.
பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா...!

5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!

ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....!!
உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....?
அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..!!
உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்...

தன்மானம்

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்...
நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்! *
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,
இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’
இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’
நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.
உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.
நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.
எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்

Sunday, December 27, 2015

Information about chennai

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

7வது இடம்

2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

23 வது இடம்

3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

16வது இடம்

4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

15வது இடம்

5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

14வது இடம்

6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?

மதுரை

7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

2004

8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

72993

9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

சென்னை

10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

1076 கி.மீ

11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது

1986

12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?

சென்னை (23,23,454)

14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

சென்னை (46,81,087)

15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

68.45 ஆண்டுகள்

16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?

13 மாவட்டங்கள்

17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

234

18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

1

19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன

20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?

சென்னை

21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

71.54 ஆண்டுகள்

22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

15979

23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

561

24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

146

25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

18

26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

39

27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?

தர்மபுரி (64.71 சதவீதம்)

28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

பெரம்பலூர் 5,64,511

29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

31) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?

32

32) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?

அரியலூர்

33) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?

திருப்பூர்

34 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்

80.33 சதவீதம்

35 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?

17.58 சதவீதம்

36 ) தமிழகததின் மாநில விலங்கு எது?

வரையாடு

37 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?

சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

38 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

39 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்

40 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?

999பெண்கள்(1000 ஆண்கள்)

41 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி

42 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்

43) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?

மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

44) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?

www.tn.gov.in

45) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

சென்னை

46 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

47 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?

திருவில்லிபுத்தூர் கோபுரம்

48 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?

கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

49 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

நீராடும் கடலுடுத்த

50 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

பரத நாட்டியம்

51 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

மரகதப்புறா

52 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

பனைமரம்

53 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

செங்காந்தர் மலா்

54 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

கபடி

55 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?

1,30,058 ச.கி.மீ

56 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

7,21,38,958

ஆண் 36158871  பெண் 35980087

கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள்.