Monday, October 12, 2015

Pi=22/7=3.142

forwarded message        நான் எட்டாம் வகுப்பு படிக்கும்  போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது

வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)

நான் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...

நான்: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.

ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?

நான்: சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.

ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.

நான்: ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.

ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.

இருப்பினும் நான் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து உள்சென்றேன்.

இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.

எனது தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். எங்கள் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணிஎன்னிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற நான் எழுத வேண்டும்.

அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் என்னை நெருடியது. அவ்வாக்கியம்,

ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.

இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, என் தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினேன்.

பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.

       அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.

இந்த விளக்கம் என் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். நானும் சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டேன். அதற்கு என் தாத்தா கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் பாதித்தது.

அவ்வார்தைகள்.....

உனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரிய ( கஞ்சிக்கு கையேந்து) உத்யோகத்துக்கு போ....

ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைந்தேன்..

ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? தற்காலத்தில் அவை என்ன ஆனது???

எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????

உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன???

ஒரு குட்டி கதை

ஒரு குட்டி கதை.....

( படித்ததில்
பிடித்தது )

ஒரு ஊரில் பெரிய கோயிலில்
கோபுரத்தில்
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,

திடீரென்று கோயிலில் திருப்பணி
நடந்தது
அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு
இடம் தேடி பறந்தன

வழியில் ஒரு
தேவாலயத்தை கண்டன

அங்கு சில
புறாக்கள்
இருந்ததன

அவைகளோடு இந்த
புறாக்களும்
அங்கு குடியேறின.

சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ்
வந்தது.

தேவாலயம் புதுப்பிக்க தயாரானது

இப்போது இங்கு
இருந்து சென்ற
பறவைகளும் அங்கு
இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .

வழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும்
சில புறாக்கள் இருந்தன.

அவைகளோடு
இந்த புறாக்களும் குடியேறின

சில நாட்கள்
கழித்து
ரமலான் வந்தது

வழக்கம் போல்
இடம் தேடி பறந்தன.

இப்போது மூன்று
இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின.

கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.

ஒரு குஞ்சுப்புறா
தாய் புறாவுடன்
கேட்டது
"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...

அதற்கு அந்த தாய் புறா சொன்னது "நாம்
இங்கு இருந்த போதும்
புறா தான்,
தேவாலயத்துக்கு போனபோதும் புறா
தான்,
மசூதிக்கு போன போதும் புறா தான் ",

"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால்
இந்து"
"சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்"
"மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது;

குழம்பிய குட்டி புறா
"அது எப்படி நாம் எங்கு
போனாலும் புறா
தானே அதுபோல தானே மனிதர்களும் "என்றது.

அதற்கு தாய் புறா
"இது புரிந்ததனால்
தான் நாம் மேலே இருக்கிறோம்,
இவர்கள் கீழே
இருக்கிறார்கள்" என்றது..

...👌👌🙏👌🙏👌👌

What's the value of life?

A man went to a Guru and asked, "What's the value of life?"
Guruji gave him one stone and said, "Find out the value of this
stone, but don't sell it."
The man took the stone to an Orange Seller and asked him what its
cost would be.
The Orange Seller saw the shiny stone and said, "You ca take 12
oranges and give me the stone."
The man apologized and said that the guru has asked him not to sell it.
He went ahead and found a vegetable seller. "What could be the value
of this stone?" he asked the vegetable seller.
The seller saw the shiny stone and said, "Take one sack of potatoes
and give me the stone."
The man again apologized and said he can't sell it.
Further ahead, he went into a jewelery shop and asked the value of the
stone.
The jeweler saw the stone under a lens and said, "I'll give you 50 Lakhs
for this stone." When the man shook his head, the jeweler said, "Alright,
alright, take 2 crores, but give me the stone."
The man explained that he can't sell the stone.
Further ahead, the man saw a precious stone's shop and asked the
seller the value of this stone.
When the precious stone's seller saw the big ruby, he lay down a red
cloth and put the ruby on it. Then he walked in circles around the ruby
and bent down and touched his head in front of the ruby. "From where
did you bring this priceless ruby from?" he asked. "Even if I sell the
whole world, and my life, I won't be able to purchase this priceless
stone.
Stunned and confused, the man returned to the guru and told him what
had happened. "Now tell me what is the value of life, guru ji?"
Guru said, "The answers you got from the Orange Seller, the
Vegetable Seller, the Jeweler & the Precious Stone's Seller explain the
value of our life... You may be a precious stone, even priceless, but
people will value you based on their financial status, their level of
information, their belief in you, their motive behind entertaining you,
their ambition, and their risk taking ability. But don't fear, you will surely
find someone who will discern your true value."
Respect yourself.
You are also Unique.
No one can Replace you!

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

"நீதிக்கதை" பாலைவனத்தில் பயணம்
செய்து கொண்டிருந்த ஒருவன்
குடிக்கத் தண்ணீர் இல்லாமல்
மயங்கி விழும்
நிலைக்கு வந்து விட்டான்.
தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த
போது தூரத்தில்
ஒரு குடிசை போல
ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும்
கஷ்டப்பட்டு அவன் அந்த
இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால்
அடித்து இயக்கும் பம்ப்பும், அதன்
அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும்
இருந்தன. ஒரு அட்டையில்
யாரோ எழுதி வைத்திருந்தார்கள்.
"ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால்
தண்ணீர் வரும்.
குடித்து விட்டு மறுபடியும்
ஜக்கில்
தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்
செல்லவும்." அந்தப் பம்ப்போ மிகவும்
பழையதாக இருந்தது.
அது இயங்குமா, தண்ணீர்
வருமா என்பது சந்தேகமாக
இருந்தது. அது இயங்கா விட்டால்
அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத்
தண்ணீரைக் குடித்து விட்டால்
தாகமும் தணியும், உயிர்
பிழைப்பதற்கு உத்திரவாதமும்
உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக்
குடித்து விடுவதே புத்திசாலித்தனம
் என்று அறிவு கூறியது.
ஒரு வேளை அதில்
எழுதி வைத்திருப்பது போல்
அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான
அந்தத் தண்ணீரைக்
குடித்து விட்டால், இனி தன்னைப்
போலத்
தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல்
போகத் தானே காரணமாகி விடுவோம்
என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல்
யோசிக்கவில்லை.
ஆனது ஆகட்டும் என்று அந்தப்
பம்பில் அந்தத்
தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க
ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய
அளவு தண்ணீர்
குடித்து விட்டு அந்த ஜக்கில்
நீரை நிரப்பி விட்டுச் செல்கையில்
அவன் மனம் நிறைந்திருந்தது. நாம் அவசியமான காலத்தில்
அனுபவிப்பதை அடுத்தவருக்கும்
அதே போல
பயன்படும்படி விட்டுப் போக
வேண்டும். எந்த நன்மையும்
நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில்
பெரும்பாலான மனிதர்களிடம் அந்த
நல்லெண்ணம் இருப்பதில்லை. நம்
வேலை ஆனால் சரி, அடுத்தவர்
எக்கேடு கெட்டால் நமக்கென்ன
என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்" என்ற மனநிலையில்
ஒவ்வொருவரும் இருந்தால் இந்த
உலகம்
இன்பமயமாகி விடுமல்லவா? கதை பிடித்திருந்தால்
மற்றவருக்கும் பகிரவும்...

Who is poor? Who is Rich?

👌👌  who is poor?

A wealthy woman goes to a saree store and tells the boy at the counter "Bhaiya show some cheap sarees. It is my son's marriage and I have to give to my maid."

After sometime, the maid comes to the saree shop and tells the boy at the counter "Bhaiya show some expensive sarees. I want to gift my Mistress on her son's marriage"

Poverty is in the mind or in the purse?
😋😊😊😊😊😊😊
Who is Rich?

Once, a lady with her family was staying in a 3-star hotel for a picnic. She was the mother of a 6 month old baby.

"Can I get 1 cup of milk?" asked the lady to the 3-star hotel manager.

"Yes madam", he replied.

"But it will cost 100 bucks". "No problem", said the lady.

While driving back from hotel, the child was hungry again.

They stopped at a road side tea stall and took milk from the tea vendor
 
"How much?” she asked the tea vendor.

"Madam, we don't charge money for kid's milk", the old man said with a smile.

"Let me know if you need more for the journey". The lady took one more cup and left.

She wondered, "Who’s richer? The hotel manager or the old tea vendor?

Sometimes, in the race for more money, we forget that we are all humans. Let's help someone in need, without expecting something in return. It will make us feel better than what money can.

Hero Mother

One Day Thomas Edison Came home and gave a paper to his mother. He told her, “My teacher gave this paper to me, and told me to only give it to my mother”.
His mother’s eyes were tearful as she read out the letter aloud to her son : Your child is a genius. This school is too small for him and doesn’t have enough good teachers for training him. Please teach him yourself.
Many years after Edison’s mother died and he was one of the greatest inventors of the century, one day he was looking through the old family things. Suddenly he saw the folded paper in the corner of the drawer in a desk. He took it and opened it up. On the paper it was written: Your son is addled (mentally ill). We won’t let him come to school any more.

Edison cried for hours and then wrote in his diary: “Thomas Alva Adison was an addled child that, by the hero mother, became the genius of the century”

Monday, October 5, 2015

மகள் தந்தை பாசம்

"முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்பது மகள்களை பெற்றெடுத்த அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்..." இயக்குனர் ராமின் குரலில் உலகமெங்கும் அப்பா - மகள் பாசத்தை பறைசாற்றிய "தங்க மீன்கள்" திரைபடத்தில் இடம்பெற்ற வசனம். ஆம், அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்தா சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.

ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.... நிறையவே இருக்கிறது..

தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.

மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.

மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், "முடியாது.." என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.